நவம்பர் 30-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசும், பிரதமரின் க்ரீம் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருவதால் இந்த திட்டம் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
![free-rice-and-wheat-to-be-stopped-in-ration](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/11/One-Nation-One-Ration-Card-scheme-UPSC-IAS.jpg?resize=924%2C520&ssl=1)
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 80 கோடி ரேஷன் கடை பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்கள் தொடர வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது