உதய் மின் திட்டம் குறித்து தமிழக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார். அவர் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஆட்சி காலத்தில் மின் துறை அமைச்சராக இருந்த தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“உதய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய மற்றும் குடிசை மின் நுகர்வோர்களுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது , வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்,
கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும், காலாண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படாது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசே ஈடு செய்யும் போன்ற உத்திரவாதங்களை பெறப்பட்ட பிறகே உதய் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அதிமுக கையெழுத்திட்டதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : திமுக அரசின் இந்த செயலால் பாதிக்கப்படுவது தமிழக மக்களே – அண்ணாமலை!!
மேலும் தமிழ்நாட்டில் உதய் மின் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது, அதிக வடிக் கடன் திரும்ப செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட வட்டி சேமிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு, மத்திய அரசு நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் பெறப்பட்ட கடன் ஆகியவற்றால் ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு திட்டத்தை செயல்படுத்தியதாகவும், இன்றைய அளவில் மின் பகிர்வான கழகம் உயிர்ப்போடு செயல்படுவதற்கு உதய் திட்டம் தான் காரணம்.
உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும் தமிழக மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதையும் தற்போது மின் கட்டணம் உயர்வு தேவை இல்லை என்பதையும் மின்சார துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அவர்கள் குறிப்பிடும் நாளில் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன் அவர் தயாரா?
மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.