Isha Mahashivratri– வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாவான மஹாசிவராத்திரி விழா, ஈஷா சார்பில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது.
கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர்,
நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது.
அந்த வகையில், கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.
இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியாவுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள்,
சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.
இந்த நிலையில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டுகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி சிலை முன்பு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார்.
இந்த ரதமானது தற்பொழுது பிப் 10 ஆம் தேதி வரை வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு காட்பாடி, ஆற்காடு, குடியாத்தம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்க உள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755821907159757291?s=20
இது தொடர்பான செய்தியாளர்களை சந்தித்த தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மணிவண்ணன்,
கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை(Isha Mahashivratri) வேலூர் மாவட்டம் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில்,’
இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.
PUBLISHED BY : S.vidhya