தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1,268 நீதிமன்ற தீர்ப்புகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இனி ஒவ்வொரு இந்திய மாநில மொழியிலும் வழங்குவது என்றும், நீதிமன்றங்களை அணுகுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும்,
இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் இந்திய நீதித்துறையின் அடுத்த படியாக, அனைத்து இந்திய மொழிகளிலும், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கபடும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் இது குறித்து பிரதமர் இன்று தனது ட்விட்டரில் இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் ட்விட் செய்து இருந்தார்.
மேலும்உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் ட்விட்டரில் கருத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கான குழுவையும் அவர் நியமித்தார்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி பேசுகையில், ‘எலக்ட்ரானிக்ஸ் சுப்ரீம் கோர்ட்டு ரிப்போர்ட் (இ.எஸ்.சி.ஆர்.) திட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன.
அவற்றில் இந்தியில் 1,091 தீர்ப்புகளும், ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, கரோவில் 1, கன்னடத்தில் 17, காசியில் 1, மலையாளத்தில் 29, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4, தமிழில் 52, தெலுங்கில் 28, உருதுவில் 3 என்ற எண்ணிக்கையில் தீர்ப்புகள் குடியரசு தினமான இன்று (வியாழக்கிழமை) மொழியாக்கம் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.