கண்ணூர் மாவட்டத்தில் தனது காரில் சாய்ந்ததாக 6-வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த பதைபதைக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் மீது6 வயது குழந்தையை தாக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த நிலையில் தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து6 வயது குழந்தையிடம் கொடூரமாக நடந்து கொண்டதற்காக ஷிஹ்ஷாத் என்ற இளைஞரை கேரள போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஷிஹ்ஷாத் பொன்னியம்பலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் சம்பவம் நடந்தபோது ஒரு பெண்ணுடன் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் கணேஷ் என அடையாளம் காணப்பட்டு, புலம்பெயர்ந்த ராஜஸ்தானி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் குடும்பம் வேலை தேடி ஊருக்குக் குடிபெயர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
Police refused to register FIR and tried to protect the perpetrator. It was the natives who took the child to the hospital. This incident shook the conscience of the Keralites. Stringent action should be taken against the police officers who tried to downplay the issue. pic.twitter.com/xJwFJAQmZh
— K Surendran(മോദിയുടെ കുടുംബം) (@surendranbjp) November 4, 2022
குற்றம் சாட்டப்பட்ட ஷிஹ்ஷாத் தனது காரில் இருந்து குழந்தையை கொடூரமாக உதைப்பதைக் காணலாம். இந்த சம்பவத்தை அடுத்து அதிர்ச்சியடைந்த சிறுவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், குற்றவாளியை கைது செய்து, கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. மேலும் சிறுவனுக்கு மருத்துவச் சேவை வழங்க ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று அதன் தலைவர் கே.வி.மனோஜ் குமார் தெரிவித்தார்.