தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கண்டிகை என்ற கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை புறம்போக்கு நிலத்தில் அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சிலையை அகற்றுவதற்கு தாசில்தார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தான் சிலை அகற்றப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது..
![leaders-ordered-the-removal-of-the-statues](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/10/lj_3878_Madras_High_Court.jpg?resize=747%2C420&ssl=1)
இதையடுத்து சட்டவிதிகளை பின்பற்றி தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரிவித்த உச்ச நீதி மன்றம் இதில் எந்தவித தவறும் இல்லை. எனவே இச்சிலையை அகற்றியது சரியானது என்று வழக்கை முடித்து வைத்தது.
மேலும் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம், பொறம் போக்கு நிலத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதத்தில் அடையாளம் கண்டு மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகளை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது..
மேலும் சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என்றும் சாலைகள், பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பராமரிக்க ‘தலைவர்கள் பூங்கா’ உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் கட்டுமானங்கள் மாறும் சிலைகளை, அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.