Nagai MP Selvaraj’s death : நாகை எம்.பி. செல்வராஜ் அவர்களின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் மூச்சுத் திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 67 (Nagai MP Selvaraj’s death).
இதையும் படிங்க : May 13 Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![Nagai MP Selvaraj's death](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/image-187.png?resize=1024%2C564&ssl=1)
அந்தவகையில், நாகை எம்.பி. செல்வராஜ் அவர்களின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம்.செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
திரு.செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘கேப்டன்’ நினைவிடத்தில் பத்மபூஷன்! – பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை ..!