இளைய தலைமுறையினர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்காக சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
புகைப்பழக்கம் மற்றும் புகையிலை தொழில்துறையை கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, 2027ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர், சிறுவர்கள் சிகரெட் வாங்க முழு தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது, அனைத்து பொருட்களிலும் நிகோடின் அளவை குறைப்பது என பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையினர் சிகரெட் பிடிக்கவே கூடாது என்ற நிலையை உருவாக்கப் போவதாகவும், இளைஞர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ற சூழலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.