முதன்முதலில் `உலக அழகி’ எனும் சர்வதேச அலங்கார அணிவகுப்பு, 1951-ம் ஆண்டில் எரிக் மோர்லி என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்டது.இந்த போட்டியில் உடல் எடை, வயது, உடல் அங்கங்களின் அளவு, எலும்புகளின் நீளம், நடை, உடை என இவை அனைத்துக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன.
தனித்திறமை மற்றும் அறிவாற்றலைச் சோதிக்கும் போட்டிகள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. மற்றொரு மிக முக்கியமான விதிமுறை, திருமணம் ஆகியிருந்தால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டது .அதேபோல் நாடு மற்றும் மாநிலம் வாரியாக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவை மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த மனோகர் கட்டிட தொழிலாளி செய்து வருகிறார்.இவரது மனைவியம் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ரக்சயா(20)இந்த நிலையில் ,கல்லூரி படிப்பை முடித்துள்ள ரக்சயா தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு,
குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார். கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர்.
மேலும் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டி இந்த மாதம் ஜெய்பூரில் 18ம் தேதி முதல் 21ம் வரை நடந்தது. அந்த போட்டியில் ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் , எங்களது மகளுக்கு சிறு வயதில் இருந்து இந்த துரையின் ஆர்வமாக இருந்து வந்தார். இதனை நாங்கள் ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, சிறிய தொலைக்காட்சி முதல் மேடைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வறுமையின் காரணமாக சிலர் என் மகளின் படிப்பு செலவை ஏற்று, கொண்ட காரணத்தினால்,
அவள் மேல் படிப்பை தொடர்ந்து விடாமுயற்சியாக அவள் செயல்பட்டு வந்த காரணத்தினால், தற்பொழுது மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார் என்று கண்கலங்கி தெரிவித்தனர். அதே போல் அனைத்து மாநிலங்களிலும்இருந்து முதல் இடம் இரண்டாம் இடம் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.