தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா?என டிகே ரங்கராஜன் பேசியது குறித்து திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் தொழிற்சங்கத்தினர். அரசியல் இயக்கங்கள் சில விமர்சனங்களை வைத்தார்கள். சந்தேகங்களைக்கிளப்பினார்கள்.உடனடியாகஇரண்டே நாளில் அந்த திருத்தச்
சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
மக்களாட்சியின் மாண்பையும் ஜனநாயகத்தின் குரலையும் அந்த எவுக்கு கண்ணைப் போலக் காத்து நின்றார் ‘திராவிட மாடல்” முதல்மைச்சர் அவர்கள்.
மக்களாட்சியின் அறத்தை, அரசியல் அறத்தை இதைவிட மதிக்கும் தன்மை வேறு எதுவும் இருக்க முடியாது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேருள்ளம் நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. ஆனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் சி.பி.எம். கட்சி யில் சிலபேர் இருக்கிறார்கள் என்பதை அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ 3.5.2023 தேதியிட்ட பார்க்கும் போது அறிய வருகிறது.
அக்கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான டி.கே.ரங்க ராஜன், கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது தமிழ்நாடு அரசு குறித்த தவறான கற்பிதங்களை உருவாக்கி உள்ளார்.தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா?அதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகிறார்கள் திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் இந்த சட்டத்தை கொண்டு வர காரணமான அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி கே ஆர் க்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார் எந்த முதலாளி இந்த ஆட்சியில் நடத்துகிறார் டி கே ஆர் இதை சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக நாலாம் தர பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணியின் தர்மமா அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணிக் கட்சியான சி.பி.எம்.. தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா?
இரண்டே நாளில் முதலமைச்சர் அவர்கள் சட்டத்தை திரும்ப பெற்றாரே பி கே ஆர் சொல்லும் முதலாளி அப்போது எங்கே போனாரு என்ன குற்றச்சாட்டு இது எத்தகைய வன்மம் பி.கே.ஆர் மனதில் இருந்தால் இப்படி பேசுவார் எத்தனையோ கோபம் இருந்தால் அதனை தலைப்பாக்கி வெளியிடுவார். தமிழ்நாடு சிபிஎம் கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.
சில நாட்களுக்கு முன்னால் அக்கட்சியை சேர்ந்த பேய் மீனாட்சி சுந்தரம் எழுதிய நூல் ஒன்றை அக்கட்சியின் சார்பில் இயங்கி வரும் பாரத புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றகுமா என்பது தலைப்பு. பிரதமர் மோடி அவர்களையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் காற்றுக்களாக போட்டு உள்ளார்கள் திராவிட மாடல் மாறாகாது என்று சொல்லும் இந்த நூல் 95 ஆண்டு காலம் தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்துகிறது.
திராவிடம் என்பது இனவாதமாம் நிறை குறைகளை சொல்லி இருக்கிறோம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை குறிப்பாக தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்கள். இத்தகே அவர்களால்தான் சிபிஎம் வழிநடத்தப்படுகிறது.அதன் குரல் டிகேஆர் போன்போறோறது குரலோ ?இது தான் சி.பி.எம்.. குரலா? என்பதை நமது கேள்வி
தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்….” என்று சொல்லும் தகுதியோ. யோக்கிய தையோ டி.கே.ஆர், போன்றோருக்கு
இல்லை.. என முரசொலி தனது நாளிதழில் கடுமையாக விமர்சித்து உள்ளது