காதலர்கள் வெளியில் செல்லும்போது பெற்றோரிடம் சிக்கிக் கொள்வதுதான் பிரச்சனனை இயல்பான ஓன்று.அப்படியானால், ஒரு ஆண் தன் மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் (shopping) சென்றால் என்ன செய்வது?
உத்தரபிரதேச மாநிலம்(Uttar Pradesh)காஜியாபாத்தைச் சேர்ந்த மனிஷ்டிவாரி என்பவர் தனது காதலியுடன் ஷாப்பிங் (shopping)செய்ய வந்தார். ஒவ்வொரு கடையாக சென்று காதலிக்கு பொருட்களை வாங்கி வந்தார்.
அப்போது, திவாரியின் மனைவியும் தனது தாயுடன் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார். திவாரி தனது காதலியுடன் ஷாப்பிங் (shopping) செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது மனைவி அதே கடைக்குள் நுழைந்தார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் (shopping) செய்வதை பார்த்த திவாரியின் மனைவி உடனடியாக கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கணவரின் சட்டை காலரை பிடித்து பலமுறை அடிக்க ஆரம்பித்தார்.
On Karwa Chauth, Husband Gets Thrashed by Wife and Mother-in-Law After Getting Caught Red-Handed Shopping With Girlfriend in Ghaziabad pic.twitter.com/DGFm1ZWjPk
— Subodh Srivastava (@SuboSrivastava) October 13, 2022
இதனால் கடையெங்கும் குவிந்துள்ளது. உங்கள் சண்டையை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கடை உரிமையாளர். திவாரி அடிப்பதைப் பார்த்து, அவருடன் வந்த பெண் தடுக்க முயன்றார். உடனே அந்தப் பெண்ணுக்கும் தர்ம அடி. இந்த சண்டையை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திவாரியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திவாரிக்கும் அவரது மனைவிக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. இதனால், திவாரியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனிடையே திவாரி வேறொரு பெண்ணுடன் சுற்றித்திரிவதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரை அடித்து உதைத்துள்ளார். கர்வா சவுத் என்று அழைக்கப்படும் ஒரு பண்டிகை இப்போது வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பெண்கள் விரதமிருந்து தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி வழிபடுவார்கள். இந்த திருவிழாவிற்கு தனது காதலியை ஷாப்பிங் செய்ய அழைத்து வந்த போது திவாரி சிக்கலில் சிக்கியதாக கூறப்படுகிறது.