Africa vice president: மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா (51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவி நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மலாவி நாட்டின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் சக பயணிகளும் லிலாங்வேயில் இருந்து புறப்பட இராணுவ விமானத்தில் சென்றிந்தனர்.
அப்போது மோசமான வானிலை காரணமாக, தலைநகருக்கு வடக்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள முசுசு விமான நிலையத்தில் அந்த விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானம் காணாமல் போனதும் லிலாங்வேக்குத் திரும்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மெக்சிகோவில் செல்ஃபி மோகத்தால் இளம் பெண் உயிரிழப்பு..!!
ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்து ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பு இன்று காலை அமைச்சரவை அலுவலகத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டது.”துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் இறந்துவிட்டனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை மலாவி நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து புறப்பட இராணுவ விமானத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
51 வயதான சிலிமா, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான போட்டியாளராக இருப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.