பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் பலியான சோகம்!

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் அதிகாரிகள் எனவும், ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், இரங்கல் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts