விபத்தில் இறந்தவரின் இதயத்தை பெற்ற நபர் இறந்தவரின் தாய்க்கு இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு ( heart transplant ) இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விஷ்ணு என்பவரின் இதயத்தை அஷோக் நாயர் என்பவர் தானமாக பெற்றிருந்தார் .
இதயம் பொருத்தப்பட்ட பிறகு விஷ்ணுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்த அஷோக், தாயார் சஞ்சனாவுக்கு ஆறுதலாக இருந்து வந்துள்ளார் . இந்நிலையில் கேன்சரால் அவதி பட்டு வந்த சஞ்சனா தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் .
சஞ்சனாவுக்கு வேண்டிய மருத்துவ பணிகளையும் அஷோக் கூட இருந்து செய்து வந்துள்ளார் நீங்கள் பெற்ற மகன் இறந்தாலும் எனக்குள் வாழ்ந்து வருகிறார் என அடிக்கடி சொல்லு சஞ்சனாவுக்கு ஆறுதலாக இருந்து வந்துள்ளார் .
இந்நிலையில் கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சஞ்சனா திடிரென உயிரிழந்துள்ளார் . இதையடுத்து சஞ்சனாவின் குடும்பத்தினரின் முழு ஒப்புதலுடன் அஷோக் இறுதிச் சடங்கும் செய்துள்ளார்
விபத்தில் உயிரிழந்த விஷ்ணுவின் இதயம் தனக்குள் துடிப்பாதல் நானும் உங்கள் மகன் ( heart transplant ) தான் என்பதை உணர்த்தும் வகையில் விஷ்ணுவின் தாயாருக்கு இறுச்சடங்கு செய்த உருக்கமான நிகழ்வு அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.