conductor attack-திருச்சியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது, வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண் ஒருவரை, பேருந்து நிறுத்ததை கடந்து இறக்கி விட்டதாக சொல்லப்படுகின்றனர்.
இதனால், அந்த பெண்ணுக்கும் – நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில், நடத்துனர் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், துவாக்குடி சென்ற பேருந்து, மீண்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது .
அப்போது, சூளைக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த (பெண்ணின் உறவினர்கள்) இளைஞர்கள் ஐந்து பேர் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் வெளிநடப்பு :’மரபை மீறிய சபாநாயகர்.. ‘-நயினார் நாகேந்திரன் காட்டம்!
ஏறிய வேகத்தோடு, “ஒரு பெண்ணை எப்படி திட்டலாம்?” என்று கூறி, பேருந்து நடத்துனரை சரமாரியாக இளைஞர்கள் (பெண்ணின் உறவினர்கள்) தாக்கியுள்ளனர்.
அப்பகுதியில்,இளைஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டு பேருந்தில் இருந்த பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் ,இளைஞர்கள் எதையும் கண்டுக்கொள்ளாமல் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பேருந்தில் இருந்தவர்கள் அந்த இளைஞர்களை இறக்கி விட்டனர்.
பேருந்து நடத்துனர் மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த படுகாயம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இதையும் படிங்க: Governor’s Speech : ஊசிப்போன உணவு பண்டம் – ஈபிஎஸ்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் மீது நடத்துனர், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்திய காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து நடத்துனர் மீது ,தாக்குதலில் (conductor attack) ஈடுபட்ட அந்தப் பெண்ணின் உறவினர்களான 5 இளைஞர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.