சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கை 67.80 லட்சம் ரூபாய் ரொக்கம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![சமயபுரம் மாரியம்மன்](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/image-395.png?resize=379%2C504&ssl=1)
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும்.
![சமயபுரம் மாரியம்மன்](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/image-396.png?resize=168%2C299&ssl=1)
இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
![சமயபுரம் மாரியம்மன்](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/image-397.png?resize=600%2C338&ssl=1)
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
![சமயபுரம் மாரியம்மன்](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/image-398.png?resize=800%2C456&ssl=1)
கடந்த 7 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.67 லட்சத்தி 80 ஆயிரத்து 962 ரூபாய் ரொக்கம், 1.897 கிலோ தங்கம், 2.527 கிலோ வெள்ளி. 59 அயல்நாட்டு
![சமயபுரம் மாரியம்மன்](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/image-399.png?resize=800%2C451&ssl=1)
நோட்டுகளும், 959 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.