தமிழ்நாட்டில் வரும் மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதற்காக 3,302 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர்.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 86 மையங்களில் பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இதனிடையே, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியான நிலையில்,
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி மே மாதம் 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.