இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது .
தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது .

இந்த தொடரின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார்.
இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறவுள்ளது. உலக புகழ் பெற்ற ஜோனஸ்பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரன்டு பிற்பகல் 1 மணிக்கு இந்த போட்டி தொடங்கு உள்ளது .
சூரியகுமார் தலைமையிலான இளம் படை டி20 தொடரில் பட்டயகிளப்பிய நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆதிக்கம் செல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

ஒரு நாள் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கப்போகும் இந்திய அணி :
ரஜத் படிதார், சாய் சுதர்சன், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(கேப்டன்), ரிங்கு சிங், அக்சர் படேல், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், யுஸ்வேந்திர சாஹல், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.