டெல்லியில், செவிலியர் ஒருவர் 7 வயது சிறுமியை தத்தெடுத்து (adopted) சித்ரவதை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில், கடந்த 9-ந்தேதி, சிறுமி ஒருவரின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த பள்ளி ஆசிரியை சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பதாக ஆர்.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி சப்தார்ஜங்க் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியாராக பணியாற்றி வரும் 50 வயதுடைய ரேணு குமாரி என்ற பெண், தனது உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்துள்ளார் (adopted).
இந்நிலையில், சிறுமியை தத்தெடுத்த முதல் நாளில் இருந்தே அந்த சிறுமியை ரேணு குமாரி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். தொடர்ந்து, இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் சிறுமியை படுக்க வைத்து, சிறுமியின் உடலில் சூடு வைத்தும், நாக்கை கத்தியால் அறுத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு, தினந்தோறும் அந்த சிறுமியை ரேணு குமாரி சித்ரவதை செய்து வந்த நிலையில், அந்த சிறுமியின் உடலில் காயங்களும், தழும்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிறுமியின் உடலில் இருந்த காயங்களை அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை கவனித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் ரேணு குமாரி, அவரது கணவர் ஆனந்த் குமார் மற்றும் அவர்களது மகன் ஜானி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியை மீட்ட காவல் துறையினர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.