தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை எச்சரித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசிய தாக கூறப்படுகிறது.இந்த நிலையில், கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் அதிமுக நிர்வாகி மணலூர் மணிமாறன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
![tamilnadu sivagangai aiadmk poster](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/Screenshot-2024-04-29-192654.png?resize=780%2C424&ssl=1)
அதில் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்ணாமலை என்றும், அரைவேக்காடு அண்ணாமலை என்றும் நாங்கள் சிங்க கூட்டம் எங்கள் புரட்சி தமிழரை பற்றி பேசாதே அரவேக்காடு அண்ணாமலையே எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.