பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சை தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என வீடியோ ஆதாரத்துடன் டி.ஆர்.பாலுசபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள், தி.மு.க.வின் மக்களவை உறுப்பினரும், தி.மு. கழகத்தின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசாவைப் பார்த்துச் சிறைக்கு அனுப்புவோம் என்ற ரீதியில் பேசினார். “என்னைச் சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுவதா? நீதித்துறை உங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று ஆ.இராசா கேட்டதும் அமைச்சரிடம் பதில் இல்லை.
அதுமட்டுமல்ல, “இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?” என்றும் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மணிப்பூர் பற்றி பதில் சொல்லத் திறனின்றி தமிழ்நாட்டையும் தி.மு.க.வையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.
எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது,
மேலும் யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன,

இதனை தொடர்ந்து திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டிஆர்.பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மக்களவையில் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பதிலின் போது, .
எனவே, திருமதி ஸ்மிருதி ராணி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மக்களவையில் 9.8.2023 மற்றும் 10.8.2023 அன்று ஆற்றிய உரையின் போது, திரு எவா வேலுவின் பேச்சு என்று கூறப்படுவது நடைமுறை விதிகளுக்கு எதிரானது.

சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அந்த கடிதத்தில் டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தோடு அமைச்சர் எ. வ, வேலு பேசிய காட்சிகளையும் அனுப்பிவைத்துள்ளார்.