பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிசாட் 1 செயற்கைக்கோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான 26 மணி நேர கவுண்ட் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் அதிநவீன கேமரா இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்எல்வி – எஃப் 10 ராக்கெட், இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் கடும் மேக மூட்டத்திலும், மழைப் பொழிவின் போதும் துல்லியமான படத்தை எடுத்துத்தரும் இந்த கேமரா பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் துல்லியமாக கண்காணிக்க பெரிதும் உதவும் என கூறப்படுகிறது.
நாளை அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 3.43 மணிக்கு தொடங்கியது.