மிகவும் கொடிய நோயான எய்ட்ஸ் AIDS நோயை பரப்புவதற்காக சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள இடமண் பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து அந்த நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கும், அருகில் உள்ள தென்மலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுடன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தன்னுடைய செல்போனில் ஓரினச் சேர்க்கை குறித்த வீடியோவை காண்பித்து அந்த சிறுவனிடம் பலமுறை ஓாின சோ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான்.
ஒரு கட்டத்தில் அந்த நபரின் தொல்லை தாங்காத சிறுவன் இதுகுறித்து ஒருநாள் பெற்றோரிடம் கூறி உள்ளான். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனே இதுகுறித்து தென்மலை போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில் எய்ட்ஸ் AIDS நோயை பரப்புவதற்காக அந்த திட்டமிட்டு சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.
அதையடுத்து அந்த நபரை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : விண்ணை எட்டும் அரிசி விலை.. கவலையில் இல்லத்தரசிகள்.. ராமதாஸ் காட்டம்!
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு புனலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பைஜு அந்த நபருக்கு 3 ஆயுள் தண்டனையுடன்,
22 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.
இந்தியாவிலேயே இது மிகவும் மோசமான கொடூரமான சம்பவம் என்றும், இது போல எங்குமே தான் கேள்விப்பட்டதில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.