தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு (CP radhakrishnan) கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 18) தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து, இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார்.
மேலும் தமிழகத்தில் தென்சென்னை , திருநெல்வேலி,புதுச்சேரி உள்ளிட்ட தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று தமிழக பாஜக வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆகியோரின் செயல்பாடுகளை அவரது சொந்தப் பணிகளுடன் கூடுதலாகச் செய்ய ஜார்க்கண்ட் கவர்னர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணனை(CP radhakrishnan) கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் பணியாற்ற கூடுதல் பொறுப்பை வழங்கியதில் பணிவும் ஆசிர்வாதமும் அடைகிறேன். பிரதமர் ,அமித்ஷா ,ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.