DMK Violates Election Code : தொடர்ந்து நடத்தை விதிமீறல்களில் திமுக ஈடுபட்டு வருவதாக, அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசு தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டு இருக்கிற இடத்தில் உள்ள ஒலி ஒளி காட்சி அரங்கத்தை மூட வேண்டும் என்று புகார் கொடுத்து இரண்டு நாட்கள் கழித்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் நேற்று(03-04-24) அது மூடப்பட்டிருக்கிறது.
ஆனால் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத திமுக அரசு, அரசுஇயந்திரத்தை தனக்கு சாதகமாகவும், அரசு அலுவலர்களை தங்களுடைய கை பாவையாகவும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : பிஞ்சு குழந்தைகள் தலையில் விழுந்த பள்ளி மேற்கூரை – அதிர்ச்சி சம்பவம்!
சமீப காலமாக ஆளும் திமுக அரசின் அமைச்சர்களின் வாகனங்களையும், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களையும் முறையாக சோதனை செய்யாமல் பெயரளவில் சட்டத்தை பாதுகாப்பதாக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் பணி அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வை இடுவதாகவும், அந்த பார்வையிடக்கூடிய புகைப்படம் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையின் முகப்பு பகுதியிலேயே வெளியிடப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்தில் சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் திமுக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதை போலவும் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும் DMK Violates Election Code.
அரசு வழக்கறிஞர்கள் அரசிற்காகத்தானே அன்றி ஆளும் அரசின் கட்சிக்காக அல்ல. எனவே அந்த புகைப்படத்தில் உள்ள குறிப்பிடப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
அரசு வழக்கறிஞரை தன்னுடைய கட்சியின் லாபத்திற்காக பயன்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும்,
உடனடியாக அவர்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆர். எம். பாபு முருகவேல் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரை முழுவதுமாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.