மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி,ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது.இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ”10 மாநிலங்கள்..95 தொகுதிகள்..” நிறைவடையும் 3ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை!
▪️ குஜராத்தில் உள்ள 26* தொகுதிகளுக்கும் நாளை தேர்தல்
▪️ மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள்
▪️ உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள்
▪️ மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள்
▪️ சத்தீஸ்கரில் 7 தொகுதிகள்
▪️ பீகாரில் 5 தொகுதிகள்
▪️ அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள்
▪️ கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள் நாளை மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.