தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள் – மருத்துவருக்கு வலைவீச்சு!

karur-doctor-arrested-under-posco
karur doctor arrested under posco

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் ரஜினிகாந்த். 55 வயதான இவரின் மருத்துமனையில் மேலாளராக பணியாற்றி வருபவர் சரவணன். அந்த மருத்துமனையில் பணியாற்றி வந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்படுள்ளத்தாகவும், இதனால் அதிருப்தி அடைந்த அந்த பெண், வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் 17 வயது மகளை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மருத்துவர் ரஜினிகாந்த், அவரது தாயார் பணிக்கு வராதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு தனது தாயாருக்கு போனஸ் குறைவாக வழங்கியதால் அவர் பணிக்கு வரவில்லை என அச்சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மருத்துவமனை மேலாளர் சரவணன், மருத்துவமனைக்கு வந்து தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடைகளை வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

karur-doctor-arrested-under-posco
karur doctor arrested under posco

இதனையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு மேலாளர் சரவணன் உடந்தையாக இருந்ததாகவும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி தாயாரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மருத்துவர் ரஜினிகாந்த் மற்றும் மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மேலாளர் சரவணனை கைது செய்த நிலையில், தலைமறைவான மருத்துவரை தேடி வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts