1000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மலையடி கருப்பசாமி திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷண விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கீழக்குயில்குடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலான ஸ்ரீ மலையடி கருப்பசாமி திருக்கோயிலில் மகா-சம்ரோச்சன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தி பழங்கால சமணர் படுகை மற்றும் பழமையை பறைசாற்றும் விதமாக பாறைகளில் சிற்ப ஓவியங்கள் அமைந்துள்ள சுற்றுலாத்தலமாக இத்திருக் கோயில் அமைந்துள்ளது.
இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாண்டமான மலையடி வாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமலையடி கருப்புசாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் விளாச்சேரி, வடிவேல் கரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி செல்லம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக கோவில் முன்பு மூன்று தினங்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பூஜையில் பூஜைக்கு வைத்த கலச தீர்த்தங்களை கோவிலில் உள்ள கருப்பசாமி, முனியாண்டி, விநாயகர், அம்மன் சன்னதியில் உள்ள மகா கும்பத்திற்கு ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இவ்விழாவின் போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின்அரோகரா கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு, எதிரொலித்தது. விழாவின் தொடர்ச்சியாக கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டன.