நாளை (ஏப். 26) 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (naksal) நடைபெற உள்ளது. இதில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியும் ஒன்று.
இந்த வயநாடு தொகுதியில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடது சாரி வேட்பாளர் அன்னி ராஜா, பாஜக வேட்பாளர் கே. சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஏப்ரல் 26 தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், வயநாடு மாவட்டத்தின் தலப்புழாவுக்கு அருகில் உள்ள கம்பமலாவில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 24, புதன்கிழமை, நான்கு பேர் கொண்டு மாவோயிஸ்ட் குழு ஒன்று கம்பமலா தோட்டப் பகுதிக்கு ஆயுதம் ஏந்திய நிலையில் வந்துள்ளனர்.
Also Read : வெள்ளக்காடான கென்யா – பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு..!!
அங்கிருந்த கம்பமலா தோட்டப் பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடம் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறியுள்ளனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மொபைலில் விடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில் மாவோயிஸ்ட்கள் “தேர்தலில் வாக்களித்தால் எந்தப் பயனும் இல்லை, மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை, இனிமேல் செய்யபோவதும் இல்லை. எனவே தேர்தலைப் புறக்கணியுங்கள்” என்று கூறியுள்ளனர்.
மாவேயிஸ்ட்டுகளின் மிரட்டல் குறித்து கம்பமலா பகுதி மக்கள் கேரள காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கம்பமலா மலை சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் கிடைக்கப்பட்ட வீடியோமூலம் மிரட்டல் விடுத்த மாவோயிஸ்ட்கள் சிபி மொய்தீன், சந்தோஷ், சோமன் மற்றும் ஆஷிக் என நான்கு பேர் கொண்ட கும்பலைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பமலா பகுதி மக்கள் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகமா ( naksal ) இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியும் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.