நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் போலீஸ் மதுரை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் சென்று, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி அளித்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-167.png?resize=1024%2C569&ssl=1)
இந்நிலையில் சீமான் பெயருக்கு நடிகை விஜயலட்சுமி களங்கம் விளைவித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் என பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-166.png?resize=680%2C381&ssl=1)
அந்த புகாரில் விஜயலட்சுமி பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே சீமான் மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் எனவும் தெரிவித்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-165.png?resize=720%2C540&ssl=1)
மேலும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டை நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் விஜயலட்சுமி இது போன்ற பொய் புகார்களை கூறி வருவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காவல்துறையில் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.