குணா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், பெண் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வதைக் காட்டும் புகைப்படங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்தன, மாநில பஞ்சாயத்து அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளிகளில்வி துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/NarendraSaluja/status/1572812570704023552?s=20&t=zLQ_fIKfbog-98AFK7Phrw
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவலின்படி, குணா மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறைகளைச் சுத்தம் செய்திருக்கின்றனர். சிறுமிகளை பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி இப்படி செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மேலும், சம்பவம் நடந்த நாளன்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பள்ளியில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை மாவட்ட கல்வி அதிகாரி (DEO) மறுத்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம், “பள்ளிக்கல்வித் துறையின் குழு பள்ளிக்கு வந்து தனித்தனியாக ஆய்வு நடத்துவதாக அதிகாரி கூறினார். இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சந்திரசேகர் சிசோடியா கூறுகையில், “இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து விசாரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.