Annamalai’s election campaign : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்தே, தமிழகத்தில் விஐபி தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது கோவை மக்களவைத் தொகுதி.
சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் வருகின்றன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள் தான் பிரதான தொழிலாக உள்ளன.
நெசவுத் தொழிலும், பஞ்சாலைகளும், கனரக தொழிற்சாலைகளும், மென்பொருள் நிறுவனங்களும் பல ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக, அதன் தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் முன்னாள் மேயரும், மாநகர் மாவட்ட அவைத் தலைவருமான கணபதி ப.ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க : “நாளையிலிருந்து போதை (Drug) உதயநிதி” – அண்ணாமலை பேட்டி!
தொடக்கத்திலிருந்து இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்கள் என மாறி, மாறி கோவை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,
இந்த முறை வெற்றிக் கோட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை Annamalai’s election campaign : .
அந்த வகையில், கோவை – கேரள எல்லையில் வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை, “பிரதமர் மோடிக்கு பழங்குடி மக்கள்மீது அதிக அக்கறை உள்ளது.
மலைப் பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்களை பிரதமர் மோடி மட்டும்தான் கொண்டு வந்துள்ளார். ஆனைகட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைவிவகாரத்தில், திமுக குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது.
இவர்களே பிரச்சினையைத் தொடங்கி வைத்துவிட்டு, வேறு ஒருவர் மீதுபழி போடுகின்றனர். இயற்கையுடன் ஒன்றியிருக்கும் ஆனைகட்டி போன்ற பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும்.
இங்குள்ள மரங்கள் எல்லாம் வைரத்துக்குச் சமமானவை. இந்தியாவின் ஆதிகுடி பழங்குடிமக்கள்தான். பிரதமர் மோடி, பழங்குடியைச் சேர்ந்த பெண்ணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார்.
மலைவாழ், பழங்குடி மக்களின் பாதுகாவலர் மோடிதான்” என்றவர் தன்னுடைய பிரச்சார வாகனத்தை சுட்டிக்காட்டியபடி, “இந்த ஒரு வண்டிதான்டெல்லி செல்லும். மற்றவைஎல்லாம் உள்ளூர் வண்டிகள்.
தமிழகத்தில் ஒரு டாஸ்மாக் கடையை எடுப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடுவதற்குத்தான், அரசியலுக்கு வந்துள்ளோம். மது அருந்துபவர்களை அருந்தவேண்டாம் என்று நாம் கூறமுடியாது.
டாஸ்மாக் மதுபானங்கள் அனைத்தும் ஸ்பிரிட் வகையைச் சேர்ந்தவை. இதனால் வயிற்றுக்கு மட்டுமல்ல, மொத்த உடல் நலனுக்கும் கேடு. எனவே, அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூடிவிட்டு, கள்ளுக்கடைகளைத் திறப்போம்.
கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐபொய் சொல்கிறது என்று கூறுபவர்கள், இது தொடர்பாக விவாதம் செய்யத் தயாரா? கச்சத்தீவு ஒப்பந்தமே இந்திரா காந்தி, ஒரு அமைச்சர் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்தான்.
நாம் கச்சத்தீவைக் கொடுத்தபோதும், இந்திய மீனவர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்று இருந்தது. அதையும் ஆர்டிக்கிள் 6-ஐ வைத்து எடுத்து விட்டனர்.
கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே எங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு” என்று பேசிய அண்ணாமலை, நேற்று மாலை கும்மி ஆடியபடி வாக்கு சேகரித்த்தும் குறிப்பிடத்தக்கது.
கோவை வெள்ளக்கிணறு பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலையுடன் நேற்று பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, “முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும்.
மோடி இருக்கும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும். வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது.
சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது” என்றதோடு,
“இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். அதாவது, 2024 இல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும்.
அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும், கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார் அண்ணாமலை Annamalai’s election campaign : .
கொங்கு மண்டலத்தின் முக்கிய கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது கும்மி நடனம் என்பது குறிப்பிடத் தக்கது!
இதையும் படிங்க : தென் சென்னை : திசை மாறுகிறதா வெற்றிக் காற்று..!