Site icon ITamilTv

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் – தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்..!!

4 Crore issue

4 Crore issue

Spread the love

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது .இதற்காக வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர வாகன சோதனையில் ( 4 Crore issue ) பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன் சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் சோதனை செய்ததில் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

Also Read : சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசு – எச்சரிக்கை விடுத்த அன்புமணி

இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களிலும் சில சோதனைகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

கேசவவிநாயகம், எஸ்ஆர் சேகர் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி ( 4 Crore issue ) சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version