நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தை சேர்ந்தவர் மாணவி தர்ஷினி. இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வராத நிலையில் அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் 4.5.2025ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தர்ஷினி அவரது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி தர்ஷினி தற்கொலை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.