சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் கேளிக்கை விடுதியில் மதுபானக் கூட (PUB) மேற்கூரை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் செயல்படும், தனியாா் கேளிக்கை விடுதியின் ஒரு பகுதியில் மதுபானக் கூடத்துடன் ஓா் அரங்கும், மற்றொரு பகுதியில் உணவகமும் உள்ளன.
இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விடுதிக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினா். சுமாா் 30 போ் விடுதியில் இருந்த நிலையில், மாலை 6.50 மணி அளவில் திடீரென விடுதியின் முதல் தளத்தில் உள்ள மதுபானக் கூடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
இதில் மதுபானக் கூட ஊழியா்களான திண்டுக்கல்லை சோ்ந்த சைக்ளோன் ராஜ், மணிப்பூரை சோ்ந்த திருநங்கை லல்லி, மேக்ஸ் ஆகியோா் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேர போராட்டத்துக்குப் பின்னர், சைக்ளோன் ராஜ், மேக்ஸ், லல்லி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சடலங்களாக மீட்கப்பட்டனா்.
அவர்களது உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. விபத்துக்காரண காரணம் தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்துக்குப் பின்னர் விடுதி உரிமையாளர் தலைமறைவான நிலையில், கேளிக்கை விடுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் அதிர்வு காரணமாக கேளிக்கை விடுதியின் மேற்கூறை இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் தகவல் பரவிய நிலையில், அதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஆழ்வாா்பேட்டையில் பொழுதுபோக்கு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவிலேயே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மெட்ரோ பணிகளால் இக்கட்டடத்தில் அதிா்வுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இருப்பினும், மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை (PUB) மேற்கொண்டு வருகின்றனா். மீட்புப் பணிகளிலும் மெட்ரோ நிா்வாகம் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.