வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மறுக்கும் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூரில் Cuddalore மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயணித்து கூடலையாத்தூரில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் வங்கக் கடலில் கலக்கிறது.
வெள்ளாற்றின் மொத்த நீளம் சுமார் 205 கிலோ மீட்டர் ஆகும். வெள்ளாற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பில் அமையப்பெற்ற அணைக்கட்டில் இருந்து வெள்ளாறு வளைந்து நெளிந்து வங்கக் கடலைச் சென்றடைகிறது.
கடல் நீர் இந்த ஆற்றின் வழியாக உட்புகுவதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.
இதனால், சிதம்பரம் வட்டங்களில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறி விளைநிலங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் தண்ணீர் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயனற்றதாக மாறிவிட்டது.
நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் தமிழகம் வெற்றி கழகம் (தவெக) !
விடியா திமுகஅரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டதால், புவனகிரி தொகுதி கழகசட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கடிதங்கள் வாயிலாகவும்,
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதல் பணியாகவும் இதைத்தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்ததோடு,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டுமுறை தடுப்பணை கட்டுவது குறித்து கழகசட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.
மேலும், 13.9.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றவிதி 55-ன் கீழ் கவனஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தார்.
இருப்பினும், அதிமுக கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் இத்திட்டத்தை விடியா திமுகஅரசு கிடப்பில் போட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் சிதம்பரம் வட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்புநீராக மாறுவது தடுக்கப்படும்;
விவசாயம் மேலும் செழிப்படையும். விவசாயம் பாதுகாக்கப்படவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும், வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது.
ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்காத விடியாதிமுக அரசின் பொம்மை முதல்வரை கண்டித்தும்,
பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், அதிமுக கழக கடலூர் Cuddalore மேற்கு மாவட்டத்தின் சார்பில், 7.2.2024 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், புவனகிரியில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில்,
கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்மொழிதேவன், எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்கள் நலனை முன்வைத்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
பொதுமக்களும், விவசாயிகளும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.