தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் இலச்சினையின் நீல நிறம் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சி இது என பலரும் குரலெழுப்ப, இதனை “தங்களின் புதிய அவதாரம்..” எனக் குறிப்பிட்டுள்ளது தூர்தர்சன்.
இந்த நிலையில் இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனின் இலச்சினையின் நீல நிறம் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி
இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்! என்று குறிப்பிட்டுள்ளார்.