பிரதமர் நரேந்திர மோடியின்(pm modi) வாட்ஸ்அப் சேனலில் ஒரே வாரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைத்துள்ளனர்.
வாட்ஸ்அப்பில் ‘‘சேனல்’’ என்ற டெலிகிராம் போன்ற அம்சத்தை மெட்டா நிறுவனம் செப்டம்பர் 13 அன்று இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சமீபத்தில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த செயலியில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்திருக்க இந்த சேவை உதவுகிறது. அந்த வகையில்,பிரதமர் நரேந்திர மோடி(pm modi ) செப்டம்பர் 20 ஆம் தேதி வாட்ஸ்அப் சேனல்களில் இணைந்தார்.

வாட்ஸ்அப் சேனலில் தனது புகைப்படத்தை பகிர்ந்து “வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ,மக்களிடையே நெருங்கி பழகவும் அவர்களின் தொடர்ச்சியான பயணத்தில் பயணிக்க இது இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ளது என பதிவிட்டு இருந்தார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வாட்ஸ்அப் சேனலில் ஒரே வாரத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.பிரதமர் தனது வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்ட முதல் பதிவுக்கு சில நிமிடங்களில் நூற்றுக்காணக்கான எதிர்வினைகள் தங்களது கருத்துக்களை எமோஜி மூலம் பகிர்ந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி தனது சேனலில் பகிர்ந்த செய்தியில், “நாங்கல் 50 லட்சத்துக்கும் அதிகமான சமூகமாக மாறியுள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் ஈடுபாட்டுக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.