நாகப்பட்டினத்தில், இருக்கை கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் (cellamuthu mariamman) கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் (cellamuthu mariamman) கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 12-ந்தேதி இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி 14-ந்தேதி பால்குடம் மற்றும் காவடி வீதி உலா வந்தது.
அதனைத் தொடர்ந்து, செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது, செல்லமுத்து மாரியம்மன் மணிமண்டபத்தில் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில், தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை சேவகனார் ஆற்றுப்பாலத்தில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
அப்போது, கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.பின்பு, செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இருக்கை கிராம மக்கள் செய்து இருந்தனர்.