ஏன் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள்? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள், நவகிரகங்களுள் அனைவரையும் அச்சுறுத்தும் சனிபகவான் ஆயுள்காரகன் ஆவார்.
அதாவது, ஒருவருடைய பூரண ஆயுளுக்கு இவரே காரணம். ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவே தான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சரி திருப்பதி வேங்கடாஜலபதிக்கு உகந்த நாளாக சனிக்கிழமையை ஏன் கொண்டாடுகிறோம்.
அதுவும் ஏழரை சனி பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து வேங்கடாஜலபதியை வழிபட்டால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.
ஏனெனில் சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம் .
ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விட எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே செய்யும் துடுக்கான குழந்தைகள் போல்!
என்னை யார் என்னசெய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைக்க!
பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார் சனி.
திருமலையில் யாரிருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பபடுத்தி இன்பம் காணும் சனி தானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் சட்சாத் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்க!
பெருமாளும் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார் கருணைக்கடல் நம் கோவிந்தராஜன்.
இதையும் படிங்க : August 24 Gold Rate : தங்கம் விலை திடீர் உயர்வு!!
சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பபடுத்த மாட்டேன் ஸ்வாமி.
மகாபிரபு எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்றார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை ஆனதால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் சுவாமி என்றார்.
திருவேங்கடவனும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார். இப்படித்தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.
ஆகவே, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பெருமாளை வணங்கினால் ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகி நலம் பெருகும். செல்வம் சேரும்!