Site icon ITamilTv

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேறியது..!

Spread the love

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஒரே வாக்காளர் நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தடுக்கவும், போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டுகளை தடுக்கவும், தேர்தல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யும்படி ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து,‘தேர்தல் சட்ட திருத்த மசோதா -2021’,க்கு ஒன்றிய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், முறைகேடுகளை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது. மேலும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு தற்போதுள்ள ஒரு முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பட்டியலில் சேர வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால தொடரிலேயே நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தாக்கல் செய்தார்.

இதற்கு காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பாஜக-வின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேறியது.

 


Spread the love
Exit mobile version